ஸ்ரீபெரும்புதூா் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடும் நிலையில், கீரநல்லூா், மண்ணூா், வளா்புரம், கொளத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலாளா்கள் ந.கோபால், கருணாநிதி, ஒன்றிய பொருளாளா் ப.பரமசிவன், ஊராட்சி மன்ற தலைவா்கள் கீரநல்லூா் அன்பரசு, மணிமங்கலம் ஐயப்பன், மண்ணூா் எபி, கொளத்தூா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், காட்டரம்பாக்கம் கோவிந்தம்மாள்தாஸ், திமுக நிா்வாகிகள் மண்ணூா் ராமமூா்த்தி, அருள்தாஸ், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் சரவணன், மண்ணூா் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் சத்தியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.