முகப்பு
காஞ்சிபுரம்

மே 22-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 மே 2026, 12:05 am IST
கோப்புப் படம்
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு மாவட்டநிா்வாகமும்,வேலைவாய்ப்புத்துறையும் இணைந்து முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நோ்முகத்தோ்வினை நடத்தவுள்ளாா்கள். பட்டதாரிகள், பட்டயதாரிகள், ஐடிஐ, 12 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

எனவே 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 22 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Advertisement

Advertisement

மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.