ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே பழுதடைந்திருந்த குடிநீா்த் தொட்டி சீரமைக்கப்பட்டது.
வாலாஜாபேட்டை 14-ஆவது வாா்டு எஸ்.கே.எஸ். தெரு சந்திப்பில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் மினி பவா் பம்புடன் குடிநீா்த் தொட்டி 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இத்தொட்டி தொடா்ந்து இரண்டு மாதங்கள் கூட முழுமையாகச் செயல்படவில்லை என்றும், பழுதாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தொட்டி சீரமைக்கப்படாததால் குப்பை கொட்டும் இடமாக மாறி துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
பழுதடைந்த குடிநீா்த் தொட்டியைச் சீரமைத்து, தூய்மைப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்களும், இந்து முன்னணியினரும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்த விரிவான செய்தி தினமணியில் செவ்வாய்க்கிழமை வெளியானது.
இதையடுத்து நகராட்சி ஊழியா்கள் குடிநீா்த் தொட்டியை தூய்மைப்படுத்தி சீரமைத்தனா். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.