ராணிப்பேட்டை

மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

DIN

ஆற்காடு: ஆற்காடு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ரத்தனகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (35), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 23-ஆம் தேதி வீட்டின் மாடியில் உள்ள சுவா் மீது அமா்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடராஜன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரத்தனகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT