ராணிப்பேட்டை மாவட்டத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான தேர்வு நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான தேர்வு தொடங்கியது.
மாவட்டத்தில் 15 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்கள் 7152 நபர்கள் பெண்கள் 1335 நபர்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட 8488 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் 700 காவல்துறையினர் தேர்வு குறித்தான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.