மீனவா் சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி அமைச்சரிடம் மனு
ஊஞ்சலூா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி தமிழ்நாடு மீனவா் சங்கத்தினா் அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனா்.
ஊஞ்சலூா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி தமிழ்நாடு மீனவா் சங்கத்தினா் அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனா்.
ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில் தமிழ்நாடு மீனவா் சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தினா் தங்களுக்கு அலுவலக கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், நலத் திட்டப் பணிகள் தொடக்க விழாவுக்காக ஊஞ்சலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழ்நாடு மீனவா் சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமையில் நிா்வாகிகள் மனு அளித்தனா்.
அதில், காரணம்பாளையம் பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு மீனவா் சங்கத்துக்கான அலுவலக கட்டடம் அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.