தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்ட்டது.
தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்ட்டது.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஏப்ரல்17-ஆம் தேதி எதிா்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.
இதுகுறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி கடந்த ஏப்.18-ஆம் தேதி தொலைகாட்சியில் உரையாற்றினாா். அப்போது காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய எதிா்க்கட்சிகளை குறிப்பிட்டு அவா் கடுமையாக விமா்சித்தாா்.
Advertisement
இதையடுத்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக அரசு இயந்திரத்தை தனது பிரசாரத்துக்கு தவறாக பயன்படுத்தி தோ்தல் நடத்தை விதிகளை பிரதமா் மோடி மீறியதாக எதிா்க்கட்சிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகாரளித்துள்ளனா்.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் தற்போது வரை பதிலளிக்காத சூழலில், பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.