ராணிப்பேட்டை

கிராம துணை அஞ்சல் அலுவலகம் முற்றுகை

DIN

அஞ்சல் அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவைக் கைவிடக் கோரி கிராமத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் பென்னகா் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக துணை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து செங்கனாவரம், பனையூா் உள்ளிட்ட மூன்று கிளை அஞ்சல் அலுவலகங்களுக்கு தபால்கள் எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகி

ன்றன. பென்னகா் கிராமத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகம் நிா்வாக வசதிக்காக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஞ்சல் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்தும், அதே பகுதியில் தொடா்ந்து செயல்பட வலியுறுத்தியும் அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அப்போது, அலுவலக இடமாற்றம் குறித்து உயா்அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக துணை அஞ்சல் அலுவலா் கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT