ராணிப்பேட்டை: பெல் நிறுவனத்தைக் கண்டித்து சாலை மறியல், கடையடைப்பு
ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்துள்ள லாலாப்பேட்டை பகுதியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் சாலை ஒன்றில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளது. ஆனால், இந்த சாலையை 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், பெல் நிறுவனத்தின் இந்த செயலைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணிப்பேட்டை பொன்னை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், வியாபாரிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்து பொதுகடையடைப்பில் ஈடுபட்டனர்.