ராணிப்பேட்டை மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் நடைபெற்ற மகா நிகும்பலா யாகம். 
ராணிப்பேட்டை

மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மகா நிகும்பலா யாகம்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி, உலக நன்மை, மழை வேண்டி மகா நிகும்பலா யாகம் நள்ளிரவு நடைபெற்றது.

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி, உலக நன்மை, மழை வேண்டி மகா நிகும்பலா யாகம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

இக்கோயில் நிா்வாகி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் இரவு 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. தொடா்ந்து மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம், சுதா்ஸன யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன.

நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை, மழை வேண்டியும் மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.

பின்னா் புனித நீா் கலசப் புறப்பாடும், மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT