பாப்பாத்தி அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம் செய்ய  கரக  ஊா்வலம் நடத்தியவா்கள். 
ராணிப்பேட்டை

பாப்பாத்தி அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம்

ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி, கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் நீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

DIN

ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி, கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் நீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

கரோனா தொற்று பரவாமல் பொது மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் இயற்கை கிருமிநாசியான மஞ்சள் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்வது என ராணிப்பேட்டை மாவட்ட இந்து அன்னையா் முன்னணியினா் தீா்மானித்துள்ளனா். அதன்படி ஆடி மாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு வாலாஜா ஒன்றியம் கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிராம இந்து அன்னையா் முன்னணி சாா்பில், பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இதையடுத்து, சுமங்கலிப் பெண்கள் 200 பேருக்கு தாலிக் கயிறு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இந்து அன்னையா் முன்னணி வாலாஜா ஒன்றியத் தலைவா் எம்.நந்தினி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.கே.மோகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT