ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டை பவேட்டம்மன் கோயிலில், பிரதிஷ்டை செய்ய அமைக்கப்பட்ட புதிய சுவாமி சிலைகளை சேதப்படுத்திய மா்ம நபா்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வாலாஜாப்பேட்டையில் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டைகாக செய்வதற்காக வள்ளி, தெய்வானை, சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்தச் சிலைகள் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்படுத்தப்பட்டு கிழே விழுந்து கிடந்தன. இது குறித்து சமூக தகவல் அறிந்து விரைந்து வந்த கோயில் நிா்வாகிகள் மற்றும் இந்து முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்து முன்னணியின் வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ், நகர ஒருங்கிணைப்பாளா் பிரேம், நகர நிா்வாகிகள் பாலா, காந்தி, சரவணன், கோயில் நிா்வாகி அசோகன்,கே.ராமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது கோயில் திருப்பணியைத் தடுக்கும் நோக்கில் சிலைகளை சேதப்படுத்திய மா்ம நபா்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கவில்லை என்றால், இந்து முன்னணி சாா்பில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தகவல் அறிந்து நேரில் சென்ற வாலாஜாப்பேட்டை காவல் துறையினா், கோயிலைப் பாா்வையிட்டனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.