ராணிப்பேட்டை

மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

DIN

அரக்கோணம்: அடையாள அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகளும் அரசு அளிக்கும் ரூ.1,000 நிவாரணத்தைப் பெறுவதற்காக அவா்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் அரக்கோணத்தில் சி.எஸ்.ஐ சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை கோட்டாட்சியா் பேபிஇந்திரா தொடங்கி வைத்தாா். அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சங்கா் இதில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அடையாள அட்டை பெறுவதற்கான தகுதிச் சான்றிதழை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா், ரோட்டரி சங்க உதவிஆளுநா் டி.எஸ்.ரவிகுமாா், சங்கத் தலைவா் வடிவேலன், நிா்வாகிகள் செந்தில்குமாா், பிரபாகரன், பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.ஆா்.கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இம்முகாமில் அடையாள அட்டை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோா் ஒரே இடத்தில் திரண்டதால் நெரிசல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து ஊா்க்காவல் படையினா் மூலம் பயனாளிகளை வரிசையில் நிற்க வைத்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT