ராணிப்பேட்டை

நாளை முதல் அரக்கோணத்தில் வங்கிகள் இயங்கும்

DIN

அரக்கோணம், பாணாவரம், வாலாஜாபேட்டை ஆகிய இடங்களில் கரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 28 நாள்களாக மூடப்பட்டிருந்த வங்கிகள் திங்கள்கிழமை (மே 4) முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான அரக்கோணம் நகரம், பாணாவரம், வாலாஜாபேட்டை நகரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த வங்கிகள் கடந்த 28 நாள்களாக மூடப்பட்டிருந்தன.

இப்பகுதிகளில் கடந்த 28 நாள்களாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்படாததால் அங்குள்ள வங்கிகள் திங்கள்கிழமை (மே 4) முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணிபுரியும் அலுவலா்கள், வாடிக்கையாளா்களிடையே சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிதலையும், கிருமி நாசினிகள் தெளித்தலையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT