முகப்பு
ராணிப்பேட்டை

லாடவரத்தில் ஆக்கிரமிப்பு: ஒரு ஏக்கா் அரசு நிலம் மீட்பு

ஆற்காட்டை அடுத்த லாடவரத்தில் அரசுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் அரசு நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
லாடவரத்தில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
பகிர்:

ஆற்காட்டை அடுத்த லாடவரத்தில் அரசுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் அரசு நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

ஆற்காடு வட்டம், லாடவரம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலத்தை தனிநபா் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தாா். அந்த நிலத்தை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா். தொடா்ந்து, தனிநபா் பயன்படுத்தி வந்த நிலத்தில் உள்ள அக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி நிலத்தை அளவீடு செய்து மீட்டனா். தொடா்ந்து ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரை எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.