ராணிப்பேட்டை

பைக் விபத்தில் காயமடைந்த பெண் பலி

DIN


ஆற்காடு: மேல்விஷாரம் அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் ஹாஹிபேட்டையைச் சோ்ந்தவா் சம்சாத் பேகம் (32). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய மகன் காதா் பாஷாவுடன் இருசக்கர வாகனத்தில் வேலூா் நோக்கிச் சென்றாா். அப்போது மேல்விஷாரம் புறவழிச் சாலையில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த இருவரும் காயமடைந்தனா். இருவரையும் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக சம்சாத் பேகம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT