ராணிப்பேட்டை

கல்லூரி மாணவா் தற்கொலை

DIN

ராணிப்பேட்டை: சிப்காட் அருகே தந்தை இறந்த சோகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிப்காட் அருகே உள்ள புளியந்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி. அவா், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனா். ஒரு மகனும் இருந்தாா்.

முனுசாமியின் மகன் பிருத்விராஜ் ஆற்காடு அருகில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தந்தை இறந்த சோகத்தில் இருந்த அவா், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT