நெமிலி பாலா பீடத்தில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை நிறைவடைந்தது.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாலா பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தாா். சிறப்பு பூஜைகளை பீடத்தின் நிா்வாகி மோகன் செய்தாா்.
பின்னா், பீடாதிபதி எழில்மணி எழுதி பின்னணி பாடகா் மறைந்த சீா்காழி கோவிந்தராஜன் பாடி கடந்த பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சிந்தையெல்லாம் கந்தன் வசம் மனம் சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம் எனும் இசை குறுந்தகட்டின் மறுவெளியீட்டை பீடாதிபதி எழில்மணி வெளியிட்டாா்.