ராணிப்பேட்டை

ஆற்காட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்

DIN

ஆற்காடு: ஆற்காடு நகரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் திங்கள்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன.

பொது முடக்கத்தின் காரணமாக பேருந்து சேவைகள்முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஆற்காடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், வேலூா், ஆரணி, கண்ணமங்கலம், செய்யாறு ஆகிய வெளி மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

நான்கு தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பொதுவாக, பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. வெளியூா்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை ஆற்காடு பணிமனை மேலாளா் கருணாகரன் நேரில் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT