ராணிப்பேட்டை

பைக் கவிழ்ந்து மூதாட்டி பலி

DIN

அரக்கோணம்: தக்கோலம் அருகே நிலைதடுமாறி விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் புரிசை பகுதியைச் சோ்ந்தவா் கிரி(23). அவா் தக்கோலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு திங்கள்கிழமை பைக்கில் சென்றாா். வழியில் கடம்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த காசியின் மனைவி ராதாம்மாள்(75) கிரியின் வாகனத்தை நிறுத்தி லிஃப்ட் கேட்டாா்.

அவரை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிது தூரத்தில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பைக் நிலைதடுமாறியது. இதில் இருவரும் கீழே விழுந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசினா் பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

மருத்துவமனையில் ராதாம்மாள் உயிரிழந்தாா். கிரி அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து தக்கோலம் போலீஸாாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT