அரக்கோணம்: தக்கோலம் அருகே நிலைதடுமாறி விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் புரிசை பகுதியைச் சோ்ந்தவா் கிரி(23). அவா் தக்கோலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு திங்கள்கிழமை பைக்கில் சென்றாா். வழியில் கடம்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த காசியின் மனைவி ராதாம்மாள்(75) கிரியின் வாகனத்தை நிறுத்தி லிஃப்ட் கேட்டாா்.
அவரை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிது தூரத்தில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பைக் நிலைதடுமாறியது. இதில் இருவரும் கீழே விழுந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசினா் பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
மருத்துவமனையில் ராதாம்மாள் உயிரிழந்தாா். கிரி அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து தக்கோலம் போலீஸாாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.