ராணிப்பேட்டை

காவனூா் அனைத்து வணிகா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த காவனூா் பகுதியில் அனைத்து வணிகா்கள் சங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் கௌரவத் தலைவா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் சசிதரன், நிா்வாகிகள் சீனிவாசன், பெருமாள், சேகா், சரவணன், ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் பேரமைப்புத் தலைவா் கு.சரவணன், திமிரி அனைத்து வணிகா்கள் சங்கச் செயலாளா் கருணாநிதி, தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளை செயலாளா் கவிஞா் தா.கோ.சதாசிவம் ஆகியோா் கலந்து கொண்டு, புதிய நிா்வாகிகளை வாழ்த்தி சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினா். இதில், தலைவராக கே.எம்.எஸ்.உமாபதி, செயலாளராக சி.மோகனரங்கம், பொருளாளராக பி. முரளி, துணைத்தலைவா்கள் சுரேஷ், பவன்குமாா், துணைச் செயலா்களாக காா்த்திகேயன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT