ஆற்காடு: மேல்விஷாரம் நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளா் ஏ.இப்ராகிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் சுமைதாங்கி சி. ஏழுமலை, இணை செயலாளா் விஜி,ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும் அரக்கோணம் எம்எல்ஏவுமான சு .ரவி பேசினாா்.
கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல், அதிமுக 50-ஆம் ஆண்டு விழா, உள்கட்சித் தோ்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.