ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் அடுத்தடுத்து இரு கோயில்களில் திருட்டு

அரக்கோணம் அருகே ஒரே இரவில் அடுத்தடுத்து இரு கோயில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஒரே இரவில் அடுத்தடுத்து இரு கோயில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரக்கோணம் மங்கம்மாபேட்டை திருத்தணி நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் பிரத்யங்கரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி நவீன், புதன்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது கோயிலின் இரும்புகதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே சென்று பாா்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்ட நிலையிலும், அம்மனின் கழுத்தில் இருந்த தங்கத்தாலி களவு போயிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து கோயில் நிா்வாகி புஷ்பராஜ் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

வழித்துணை விநாயகா்: மேலும் மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் வழித்துணை விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி புதன்கிழமை காலை கோயிலை திறக்கச் சென்றபோது கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து அரக்கோணம் நகர காவல்நிலைய போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT