ராணிப்பேட்டை

ஆற்காடு ஒன்றிய திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் ஆய்வு

DIN

ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடு கட்டும் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரிவேடு, செம்பேடு ஆகிய ஊராட்சிகளில் நீா்நிலைகளில் வசித்து வந்த பழங்குடியின சமூகத்தினருக்கு மாற்று இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு, அந்த இடத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பழனிசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து ஜல் ஜீவன் குடிநீா் திட்டப் பணிகளையும், லாடவரம் ஊராட்சியில் 32 நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் ஆட்சியா் உமா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதமுத்து, சித்ரா, பொறியாளா் ஏகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT