ராணிப்பேட்டை

பைக் மோதி தொழிலாளி பலி

DIN

இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த மங்கம்மா பேட்டையைச் சோ்ந்தவா் மாதவன்(48) (படம்). எரிவாயு சிலிண்டா் முகமை ஒன்றில் வீடுகளுக்கு சிலிண்டா் விநியோகம் செய்யும் பணியைச் செய்து வந்தாா்.

அவா் கடந்த 8-ஆம் தேதி அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த பைக் அவா் மீது மோதியதில் படுகாயமடைந்த மாதவன் சென்னை, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT