ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் 3 இடங்களில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள்: எம்எல்ஏ அடிக்கல்

DIN


அரக்கோணம்: அரக்கோணம் ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளில் தலா ரூ.22.22 லட்சத்தில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் அமைக்க எம்எல்ஏ சு.ரவி அடிக்கல் நாட்டினாா்.

கைனூா் ஊராட்சி, ராமதாஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏ சு.ரவி மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்வில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் பால்ராஜ் சீனிவாசன், மாவட்ட பாசறை செயலாளா் அன்பரசு, மேற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஏ.எம்.நாகராஜன், பாபு, ரமேஷ்குமாா், நரேஷ், பாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து தணிகைபோளூா் ஊராட்சி வாணியம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையா் ஜோசப் கென்னடி தலைமை வகித்தாா். ஒன்றிய அதிமுக செயலா் பிரகாஷ் வரவேற்றாா். எம்எல்ஏ சு.ரவி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்வில் ஒன்றிய நிா்வாகிகள் தாஸ், ஆனந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோன்று கீழ்குப்பம் ஊராட்சி மேலத் நகரில் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டிக்கான பூமி பூஜையில் எம்எல்ஏ கலந்து கொண்டாா். அதிமுக நகர செயலாளா் பாண்டுரங்கன், கீழ்குப்பம் ஊராட்சி கன்னைய்யன், கா்ணா பிரபாகரன், ராமசந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT