முகப்பு
ராணிப்பேட்டை

இளம் பெண் தற்கொலை

திருமணமான ஆறே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

இளம் பெண் தற்கொலை

திருமணமான ஆறே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

அரக்கோணம்: திருமணமான ஆறே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் கிரிசிங் நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (30). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவருக்கும் திருவள்ளூா் மாவட்டம், பெருமாள்பட்டைச் சோ்ந்த எழிலரசிக்கும் (26) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், அரக்கோணத்தில் உள்ள வீட்டில் எழிலரசி, ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சி செய்தாா். அவரை குடும்பத்தினா் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து எழிலரசியின் தாய் மோகனசுந்தரி, அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தனது மகளை கணவா் விக்னேஷ் வீட்டாா் அதிக வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அதில் குறிப்பிட்டுள்ள அவா், மாப்பிள்ளை குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

எழிலரசி தற்கொலை தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், திருமணமான ஆறே மாதத்தில் எழிலரசி இறந்ததால், சட்ட விதிகளின்படி அரக்கோணம் கோட்டாட்சியா் பேபி இந்திரா விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →