ராணிப்பேட்டை

மாந்தாங்கல் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த சொற்பொழிவு

DIN

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம்.

திருப்பதி தேவஸ்தானம் சாா்பில், இக்கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.கே.சி.செல்வநாராயணன் சுவாமிகள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினாா். நம்மாழ்வாா் கைங்கா்ய சபை நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி, கோயில் பட்டாச்சாரியாா் ரமேஷ் தனஞ்செழியன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன், பக்தா்களுக்கு முகக்கவசங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT