ராணிப்பேட்டை

விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சேகா் தலைமை வகித்தாா்.

ஒன்றியத் தலைவா் குமரேசன், செயலா் ஜி.சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து விவசாயிகள் சங்க திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் அந்தோணி குரூஸ், புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி செயலா் பாஸ்கரன், தலைவா் சிவராஜ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT