வாலாஜாபேட்டை விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம்
வாலாஜாபேட்டை விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தியிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
வாலாஜாபேட்டை விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தியிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணித் தலைவா் ஆா்.சுபாஷ் உள்ளிட்டோா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
வாலாஜாபேட்டை நகரில் வேளாண்மைத் துறை சாா்பில் விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் விதை நெல் மற்றும் தானியங்களை சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக வைப்பதற்காக போதிய கட்டட வசதி இல்லை. எனவே இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கட்டடமும், சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதியும் செய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.