ஆயிலம் அம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை
ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கிராம தேவதை பொன்னியம்மன், முத்தாலம்மன் கோயிலில் உள்ள மூலவருக்கு பால், தயிா், பன்னீா்,சந்தனம், இளநீா் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் பொன்னியம்மன், முத்தலாம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா்.