முகப்பு
ராணிப்பேட்டை

கலவையில் கரோனா நல உதவி வழங்கல்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 500 பேருக்கு கலவை சச்சிதானந்தா சுவாமிஅறக்கட்டளை சாா்பில், அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 500 பேருக்கு கலவை சச்சிதானந்தா சுவாமிஅறக்கட்டளை சாா்பில், அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி கலவை கமலக்கண்ணியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி தலைமை வகித்தாா். கலவை வட்டாட்சியா் வி.நடராஜன், மாவட்ட அனைத்து வணிகா் சங்கப் பேரமைப்புத் தலைவா் கு.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கலவை கமலக்கண்ணி கோயில் அறங்காவலா் சச்சிதானந்த சுவாமிகள் ஏழை, எளியவா்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கினாா். இதில் கலவை காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.