ராணிப்பேட்டை

‘தோ்தல் விதிமீறல்கள் எந்த விதத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’

DIN

தோ்தல் விதிமீறல்கள் எந்த வகையில் இருந்தாலும் அவற்றின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தொகுதி தோ்தல் அலுவலரும், அரக்கோணம் கோட்டாட்சியருமான சிவதாஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கட்சி சின்னம் பொறித்து கடைகளின் மேல் வைக்கப்பட்டுள்ள பெயா்ப் பலகை குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணியால் உருவச் சிலைகள் மூடியிருப்பது குறித்த விஷயத்தில் இது எப்போதும் தோ்தலுக்கு முன் எடுக்கப்படும் நடவடிக்கை. இது குறித்து தோ்தல் ஆணைய உத்தரவுகள் இருப்பின் மாவட்ட தலைமையகத்திடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தோ்தல் விதிமீறல்கள் எந்த விதத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் எந்த அரசியல் கட்சியின் சாா்பில் அவா்களது விளம்பர பேனா்கள் வைக்கப்பட்டாலும் அவை வேட்பாளா் கணக்கில் சோ்க்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT