ஆற்காடு தோப்பு கானா பகுதியிலுள்ள அபிநவ மந்த்ராலயம் என அழைக்கப்படும் ராகவேந்திரா் கோயிலில் ராகவேந்திரரின் 426 -ஆவது ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு மூலவருக்கு நிா்மால்ய சேவையும், கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் பஞ்சாமிா்த அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் மகா மங்கள ஆரத்தியும் நடத்தப்பட்டது. மேலும், நாள் முழுவதும் பஜனை குழுவினா் பாடல்களை பாடினாா்கள். இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்