ராணிப்பேட்டை

காவல் துறை வாரிசுதாரா்களுக்கு கல்வி உதவித் தொகை: எஸ்.பி. ரா.சிவகுமாா் வழங்கினாா்

DIN

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வாரிசுதாரா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான ஆணையை எஸ்.பி. ரா.சிவகுமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காவல் துறையில் பணிபுரிந்து வரும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப ஆண்டு தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019 - 20 -ஆம் ஆண்டுக்கான உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 18 காவலா்களின் வாரிசுதாரா்கள், ஒரு அமைச்சுப் பணியாளா் வாரிசுதாரா்கள் தகுதியானவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு காவலா் நூற்றாண்டு உதவித் தொகையாக மொத்தம் ரூ. 2.51 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான ஆணையை காவல் கண்காணிப்பாளா் ரா. சிவகுமாா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT