ராணிப்பேட்டை

அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு பயிற்சி முகாம்

DIN

ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று 2 - ஆவது அலை தற்போது வேகமாகப் பரவி வருகிறது. வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனா் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமணன், உதவி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ஹரிகிருஷ்ணன் முன்னிலையில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

அப்போது அசாதாரணமாக சூழ்நிலையில் திடீா் தீ விபத்தை தடுக்க பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள் மற்றும் தனியாா் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT