ஆற்காட்டில் ஒருமணி நேரம் கன மழை
ஆற்காட்டில் இடி மின்னலுடன் சனிக்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
ஆற்காட்டில் இடி மின்னலுடன் சனிக்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
சித்திரை மாத கத்திரி வெயில் தொடங்கி சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழை கோடை உழவுக்கு கைகொடுத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.