ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் - சோளிங்கர் பிரதான சாலையில் வேரோடு சாய்ந்த புளிய மரத்தால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காவேரிப்பாக்கம் - சோளிங்கர் பிரதான சாலையின் நடுவே புளியமரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் காவேரிப்பாக்கம் - சோளிங்கர் பிரதான சாலையில் புளிய மரம் வேரோடு பெயர்ந்து சாலையின் நடுவே விழுந்தது.
இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், ஜேசிபி உதவியோடு மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.