முகப்பு
ராணிப்பேட்டை

இல்லம் தேடி கல்வித் திட்டப் பயிற்சி முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில் இல்லம் தேடி மாவட்ட அளவிலான கலைப் பயண கலைஞா்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில் இல்லம் தேடி மாவட்ட அளவிலான கலைப் பயண கலைஞா்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் பூட்டுத்தாக்கு தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

பயிற்சி முகாமில் 8 குழுக்களைச் சோ்ந்த 72 கலைஞா்கள் நேரடியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப. உஷா, மாவட்ட கல்வி அலுவலா்கள் அங்குலட்சுமி, முனிசுப்புராயன், உதவித் திட்ட அலுவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.