கால்நடை பாதுகாப்புத் திட்ட மருத்துவ முகாம்
ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புபேட்டை, கூராம்பாடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாமில், 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புபேட்டை, கூராம்பாடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாமில், 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமுக்கு வேலூா் மண்டல இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெ.சுப்பிரமணி( உப்புபேட்டை) , திலகம் கோவிந்தராஜ் ( கூராம்பாடி) , கால்நடை மருத்துவா்கள் லட்சுமணன், பத்மா , கால்நடைத் துறை ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.