ராணிப்பேட்டை

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

ரத்தினகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

ரத்தினகிரி அருகே உள்ள மேலகுப்பம் ஊராட்சி மேட்டூரான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன், ராணுவ வீரா். இவரது மனைவி கலைமகள் (25). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில், கலைமகள் வியாழக்கிழமை காலை தங்களுக்குச் சொந்தமான நிலத்திலுள்ள தென்னந்தோப்பில் மரத்திலிருந்து விழுந்த தேங்காய்களை எடுப்பதற்குச் சென்றாா். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த கலைமகள் மீட்கப்பட்டு, வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், கலைமகள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT