புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குமருத்துவ உபகரணங்கள் வழங்கல்
ஆற்காடு வட்டம், புதுப்பாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஆற்காடு வட்டம், புதுப்பாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இந்திய செஞ்சிலுவை சங்க மாநிலத் தலைமை மூலம் ராணிப்பேட்டை மாவட்டக் கிளைக்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை புதுப்பாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட அவைத் தலைவா் கு.சரவணன், மாவட்டச் செயலாளா் கே.எஸ்.ரகுநாதன், ஆற்காடு கிளைத் தலைவா் பாஸ்கரன், உறுப்பினா் சிவானந்தம், மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கத் தலைவா் முஹமது அயூப் உள்ளிட்டோா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கமலா தேவியிடம் வழங்கினா்.