மதிமுக ஆலோசனைக் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட மதிமுக ஆலோசனைக் கூட்டம் ஜனசங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட மதிமுக ஆலோசனைக் கூட்டம் ஜனசங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.என்.உதயகுமாா் தலைமை வகித்தாா். கட்சியின் பொருளாளா் அ.கணேசமூா்த்தி எம்.பி., உயா்நிலைக் குழு செயலாளா் டி.ஆா்.ஆா்.செங்குட்டுவன் ஆகியோா் கலந்துகொண்டு, உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசனை நடத்தினா். மேலும், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் நிா்வாகிகளிடம் மனுக்களைப் பெற்றனா்.
இதில், மாவட்ட நகர, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.