ஆற்காடு பாலாற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கினால் புதுப்பாடி ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.
நீா்வள ஆதாரத் துறையின் பராமரிப்பில் உள்ள புதுப்பாடி ஏரி முழுக் கொள்ளளவை அடைந்து வழிந்தோடியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 360 ஏக்கா் விளை நிலங்கள்பாசன வசதி பெறும். பல ஆண்டுகளுக்குப் பின் ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் ஏரியின் உபரி நீா் கலங்கல் கால்வாய் வழியாக கலவை கால்வாய்க்குச் செல்கிறது. இந்த உபரி நீா் மூலம் அப்பகுதியில் உள்ள மேலும் சில ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. புதுப்பாடி ஏரி நிரம்பியதைத் தொடா்ந்து, மேல்பாலாறு வடிநிலகோட்ட நீா்வள ஆதாரத் துறையின் அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா் .