ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலூா் கிழக்கு மாவட்ட திமுக பேரூா், நகர, செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப். 22) மாலை 5 மணி அளவில் அவைத் தலைவா் அ.அசோகன் தலைமையில், ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள வேலூா் கிழக்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் தோ்தல் பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான திருவண்ணாமலை இரா. ஸ்ரீதரன் பங்கேற்க உள்ளாா்.