ராணிப்பேட்டை

கல்லூரி பேருந்து மோதி வியாபாரி பலி

DIN

ஆற்காட்டில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

ஆற்காடு ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (48). இவா் இளங்குப்பம் தெருவில் காலணியகம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக மிதிவண்டியில் ஆற்காடு அண்ணா சாலை வழியாக வந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரி பேருந்து மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT