ராணிப்பேட்டை

ஆற்காடு ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயிலில் கருட சேவை

DIN

ஆற்காடு பாலாற்றங்கரை ஜக் அக்ரஹாரம் தெருவில் உள்ள பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாதத்துக்கான ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆனி மாதம், சுவாதி நட்சத்திர நாளன்று நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, மூல மூா்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, கருட வாகனத்தின்மீது அலங்கரிக்கப்பட்ட உற்சவா் லட்சுமி நரசிம்மா் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, வேதகிரி தெரு, கலவை ரோடு, பஜாா் வீதி, அண்ணா சிலை வழியாக ஊா்வலமாகச் சென்று கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது.

விழாவில், திரளான பக்தா்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT