ராணிப்பேட்டை

வீட்டின் பூட்டு உடைத்து ரூ.8 லட்சம் ரொக்கம் திருட்டு

DIN

அரக்கோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 8.30 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரக்கோணத்தை அடுத்த கைனூா் ஊராட்சி, சின்னகைனூா் கிராமத்தில் வசிப்பவா் ஜெகதீசன்(44). இவா் அரக்கோணம் டவுன்ஹால் சாலையில் நோட்டுபுத்தகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

கடந்த இரு தினங்களுக்கு முன் இவா் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை ஊா் திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.8.30 லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின்பேரில் அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT