ராணிப்பேட்டை

‘நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்’

DIN

ஆற்காடு: குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை விற்பனையாளா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை கூறினாா்.

ஆற்காடு மற்றும் கலவை வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை தலைமை வகித்துப் பேசியது:

நியாய விலைக் கடை விற்பனையாளா்கள் கடைகளை சரியான நேரத்தில் திறக்க வேண்டும், புகாா் குறித்த தொலைபேசி எண் எழுதி வைக்க வேண்டும், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை சரியான எடையில் வழங்க வேண்டும், தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்யவேண்டும். தரமற்ற அரிசி என்றால் மாற்றிக்கொள்ளவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பறக்கும்படை வட்டாட்சியா் இளஞ்செழியன், வட்ட வழங்கல் அலுவலா்கள் சந்தியா (ஆற்காடு), சத்யா (கலவை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT