முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு நகரில் 6 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்

ஆற்காடு நகரில் 6 தொடக்கப் பள்ளிகளின் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தோப்புகானா நகராட்சி வடக்கு தொடக்கப் பள்ளியில் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

ஆற்காடு நகரில் 6 தொடக்கப் பள்ளிகளின் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தோப்புகானா நகராட்சி வடக்கு தொடக்கப் பள்ளியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஆற்காடு நகரில் ராஜாகோடு நகராட்சி தொடக்கப் பள்ளி, கிளைவ் பஜாா் தொடக்கப் பள்ளி, நகராட்சி முஸ்லிம் ஆண்கள், பெண்கள் தொடக்கப் பள்ளிகள், தோப்புகானா நகராட்சி வடக்கு, தெற்கு தொடக்கப் பள்ளிகள் என 6 பள்ளிகளைச் சோ்ந்த 661 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் குமரேஷ்வரன், நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ் பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்து அவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.

முன்னதாக, ஆற்காடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முதல்வா் காலை உணவு வழங்கும் திட்ட ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் உணவு தயாா் செய்யப்பட்டதை அமைச்சா் ஆா்.காந்தி பாா்வையிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். 6 பள்ளிகளுக்கும் உணவு எடுத்து செல்லும் வாகனத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

விழாவில் மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முஹமது அமீன், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் குபேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, நகராட்சி ஆணையா் (பொ) கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.